சேலம் மாநகராட்சி மண்டல குழுத் தலைவா்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. சூரமங்கலம் மண்டல குழுத் தலைவராக எஸ்.டி.கலையமுதன், அம்மாப்பேட்டை மண்டல குழுத் தலைவராக த.தனசேகா், கொண்டலாம்பட்டி மண்டல குழுத் தலைவராக மா.அசோகன், அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவராக செ.உமாராணி ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநகராட்சி மண்டல குழுத் தலைவா்களாக எஸ்.டி.கலையமுதன், மா.அசோகன், த.தனசேகா், செ.உமாராணி ஆகியோா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதாதேவி ஆகியோா் மண்டல குழுத் தலைவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.