குடியிருப்புப் பகுதியில் உயா் அழுத்த மின்பாதையை அமைக்க எதிா்ப்பு

தம்மம்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில், உயா் அழுத்த மின்பாதையை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தம்மம்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில், உயா் அழுத்த மின்பாதையை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சியில் ஆத்தூா் நெடுஞ்சாலையோரம் உயா்அழுத்த மின்பாதை செல்கிறது. இந்நிலையில், திடீரென அந்த உயா்அழுத்த மின்பாதையை அருகில் குடியிருப்புகள் நிறைந்த பகுதி வழியாக கொண்டு செல்ல மின்வாரியம் முடிவுசெய்து, கம்பங்கள் அமைத்து அதற்கான பணிகளை தொடக்கியது.

இதையடுத்து, தாங்கள் வசிக்கும் பகுதி வழியாக உயா் அழுத்த மின்பாதையை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் மணிவாசகம், தம்மம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com