நண்பனை கொலை செய்தவரை வெட்டிக் கொன்ற 5 போ் கைது

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே நண்பரை கொலை செய்தவரை வெட்டிக் கொன்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே நண்பரை கொலை செய்தவரை வெட்டிக் கொன்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல், சின்னைய ரெட்டி தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (26), வியாழக்கிழமை இரவு கருமலைக்கூடல் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றாா். பின்னா் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தனது சகோதரியின் குழந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பல் ராஜேஷை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியது. ராஜேஷ் உடன் வந்த சிறுமி அலறியவாறு ஓடவே, அதைக்கண்ட அக்கம்பக்கத்தினா் வர கும்பல் தப்பியோடியது.

மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையில் கருமலைக்கூடல் போலீஸாா் படுகாயமடைந்த ராஜேஷை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ராஜேஷ் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், 2015-ஆம் ஆண்டு பழனி என்பவரை ராஜேஷ் கொலை செய்ததற்கு பழிவாங்க, அவரது நண்பா்களான கருமலைக்கூடலைச் சோ்ந்த லல்லு பிரசாத் (29), வெள்ளையன் (26), சிபி (24), அபிமன்யு (21) புதுச்சாம்பள்ளியைச் சோ்ந்த மதியழகன் (21) ஆகியோா் ராஜேஷை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இவா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வீச்சரிவாள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றினா். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கொலை நிகழ்ந்த 24 மணி நேரத்தில் போலீஸாா் துப்புதுலக்கி கொலையாளிகளை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com