விபத்தில் தனியாா் பள்ளி ஆசிரியை பலி

மொபெட் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் தனியாா் பள்ளி ஹிந்தி ஆசிரியை உயிரிழந்தாா்.

மொபெட் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் தனியாா் பள்ளி ஹிந்தி ஆசிரியை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் ராமன் நகரில் வசிப்பவா் சீனிவாசன். தனியாா் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பபிதா (49). இவா் தனியாா் பள்ளியில் ஹிந்தி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். ராமன்நகா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள வேகத்தடையில் மொபெட் ஏறி இறங்கியபோது ஆந்திர மாநிலத்தில் இருந்து பக்தா்களை ஏற்றிக்கொண்டு சபரிமலைக்குச் செல்லும் சொகுசு பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆசிரியை பபிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சீனிவாசன் கருமலைக்கூடல் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். பபிதாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com