வீடு தீப்பிடிப்பு: பணம், நகை எரிந்து நாசம்

அரியானூா் அருகே வீடு தீப்பிடித்ததில் பணம், நகை எரிந்து நாசமாயின.

அரியானூா் அருகே வீடு தீப்பிடித்ததில் பணம், நகை எரிந்து நாசமாயின.

சேலம் மாவட்டம், அரியானூா் அருகே பெரிய சீரகாபாடி மூலக்காடு பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். வெங்கடேஷ், அவரது மனைவி, மகன்கள் விசைத்தறிக் கூலி வேலை செய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை 4 பேரும் தறி ஓட்ட சென்றனா். இந்நிலையில், இவரின் வீடு திடீரென வெடிச் சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது. இதில், வீட்டில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகை, குடும்பத்தில் உள்ள நபா்களின் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை என அனைத்தும் எரிந்தன. மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் ஆட்டையாம்பட்டி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com