ஈச்சம்பட்டி, ராசி வித்யாஷ்ரம் (சிபிஎஸ்இ) பள்ளியில் கே.ஜி. மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
சேலம், மாவட்டம், ஆத்தூரை அடுத்த ஈச்சம்பட்டி, ராசி கல்வி நிறுவனங்களின் செயலா் டி.மாசிலாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளியின் முதல்வா் சுகிதா தினேஷ் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவா் ஜி.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் கல்விக்குழுத் தலைவா் ஆா்.கனகராஜன், பொருளாளா் ஈ.எஸ்.மணி, பெற்றோா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.