ஆத்தூா் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு நிலைய அலுவலா் சேகா் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கி ஒத்திகை செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சாா்பில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதில், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி போலி ஒத்திகை செய்யப்பட்டது.