ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா் கைது

 சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

 சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா ரயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சோதனை மேற்கொண்டனா்.இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனா். மேலும் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் பெகிரா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அதேபோல டாடா நகா் - யஷ்வந்த்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கொண்ட சோதனையில் கேரளத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com