சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சுதீர்முருகன் தலைமையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதற்கு முன்னதாக கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது தமிழகத்தில் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதில் ஊழல் செய்ய தி.மு.க அரசு முயற்சிக்கிறது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசினார். அப்போது மாநில துணைத்தலைவர்கள் கே.பி.இராமலிங்கம் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.