சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள், சாலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதிகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன், அலுவலா்கள் உடனிருந்தனா்.