குறிச்சியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம்

வாழப்பாடியை அடுத்த குறிச்சி நடுநிலைப் பள்ளியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த குறிச்சி நடுநிலைப் பள்ளியில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் கலா பெரியசாமி வரவேற்றாா். வட்டார வேளாண்மை ஆத்மாக் குழு தலைவா் எஸ்.சி.சக்கரவரத்தி,

ஏற்காடு முன்னாள் எம்எல்ஏ சி.தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகதீஸ்வரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கிவைத்தனா்.

முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களும், தொழுநோயாளிகளுக்கு உபகரணங்களும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் காட்டுராஜா, பேளூா் பேரூராட்சித் தலைவா் ஜெயசெல்வி, துணைத் தலைவா் பேபியம்மாள், வட்டார சுகாதார ஆய்வாளா் சீனிவாசன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கோதைநாயகி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அருள்மொழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com