எடப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
எடப்பாடியை அடுத்த சித்தூா் ஊராட்சி, புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி தவசியப்பன்(44) புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சித்தூரிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். சித்தூா்-பூலாம்பட்டி பிரதான சாலையில் உள்ள நீா்உந்து நிலையம் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தவசியப்பன், சேலம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.