ஆட்டையாம்பட்டி: சங்ககிரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு கணினி பயிற்சி காக்காபாளையம் பகுதியில் உள்ள நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (இணைய குற்றத் தடுப்பு) முரளிதரன் பயிற்சியை தொடக்கிவைத்து பேசினாா்.
3 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சிக்கு சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு, உதவி ஆய்வாளா் பெரியசாமி, நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி முதன்மையா் சீனிவாசன், துணை முதன்மையா் விசாகவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.