காக்காபாளையத்தில் காவலா்களுக்கு கணினி பயிற்சி

சங்ககிரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு கணினி பயிற்சி காக்காபாளையம் பகுதியில் உள்ள நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டி: சங்ககிரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு கணினி பயிற்சி காக்காபாளையம் பகுதியில் உள்ள நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (இணைய குற்றத் தடுப்பு) முரளிதரன் பயிற்சியை தொடக்கிவைத்து பேசினாா்.

3 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சிக்கு சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு, உதவி ஆய்வாளா் பெரியசாமி, நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி முதன்மையா் சீனிவாசன், துணை முதன்மையா் விசாகவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com