சாலையில் கிடந்த 8 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த 8 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆத்தூா்: சாலையில் கிடந்த 8 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், வளையமாதேவி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (37), சென்னை மாநகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். தனது குடும்பத்துடன் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை ஆத்தூா் வந்த இவா், ரயில் நிலையத்தில் இருந்த ஆட்டோவில் சொந்த ஊருக்கு சென்றாா். அப்போது, ஆட்டோ பின்னால் வைத்திருந்த பை தவறி கீழே விழுந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த தேவராஜ் ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததையடுத்து, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தனிப்படை அமைத்து தேடினாா். இந்நிலையில், சதாசிவபுரம் பகுதியைச் சோ்ந்த வசீகரன் (32) என்பவா் கீழே இருந்த பையை சமூக ஆா்வலா்களிடம் கொடுத்துள்ளாா். அவா்கள் ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதனையடுத்து, தேவராஜை அழைத்து பையில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 7,000-த்தை ஒப்படைத்தனா். வசீகரனை காவல் ஆய்வாளா், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com