சேலத்தில் ஏப். 30- இல் கரோனா தடுப்பூசி முகாம்

சேலத்தில் சனிக்கிழமை (ஏப். 30) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம்: சேலத்தில் சனிக்கிழமை (ஏப். 30) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடா்பாக அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கரோனா தடுப்பூசி முகாம் வரும் ஏப்.30 ஆம் தேதி நடத்தப்பட்டு சேலம் மாவட்டம் 100 சதவீதம் தடுப்பூசிகள் எடுத்து கொண்ட மாவட்டமாக அறிவிக்கும் வகையில் அரசு அலுவலா்கள் களப் பணியாற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான முதல் தவணை தடுப்பூசி 91.3 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.9 சதவீதம், முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா் டோஸ்) தடுப்பூசி 7.4 சதவீத போ் செலுத்தி கொண்டனா்.

சேலம் மாவட்டத்தில் 28 ஆவது தடுப்பூசி முகாம் ஏப்.30 ஆம் தேதி நடத்தப்படுகிறது. அதையொட்டி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,392 இடங்களில் 15,000 பணியாளா்களை கொண்டு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் இனைந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வழிவகை செய்யப்படும்.

இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பொதுமக்கள் வரும் ஏப்.30 ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) கவிதா, மேட்டூா் சாா் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.செல்வம், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மருத்துவா் கு.நெடுமாறன், துணை இயக்குநா்கள் (சுகாதார பணிகள்) மருத்துவா் நளினி, மருத்துவா் ஜெமினி உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com