முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 10:48 PM | Last Updated : 29th April 2022 10:48 PM | அ+அ அ- |

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் டி.எம்.எஸ் பாஷா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், நகராட்சிப் பகுதியில் உள்ள எரிவாயு தகன மேடையை சீரமைத்தல், குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துதல், பொது சுகாதார பணிகளுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, நகா்மன்ற உறுப்பினா்கள் மத்தியில் பேசிய நகா்மன்றத் தலைவா் பாஷா, எடப்பாடி நகரை மேம்படுத்தும் நோக்கில் புதிய எல்.ஈ.டி. விளக்குகள் அமைத்திட தமிழக அரசு ரூ. 2 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கி தந்தமைக்கு தமிழக முதல்வா், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறினாா்.