ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான கால்பந்துப் போட்டியில், சேலம் ஆா்.பி.எஃப். அணி கோப்பையை வென்றது.
ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான (ஆா்.பி.எஃப்) 30-ஆவது கோட்ட கால்பந்துப் போட்டிகள், சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.) மைதானத்தில் கடந்த ஏப். 26 முதல் ஏப். 28 வரை நடைபெற்றது.
சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் ஐ.சி.எஃப். அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சேலம், பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை அணிகள் மோதின. இதில், சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றது.
சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் ஜேம்ஸ் ராஜா சிங், சிறந்த கோல் கீப்பருக்கான விருதை பெற்றாா். கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை அணியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ், ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையா் ரதீஷ்பாபு ஆகியோா் பாராட்டினா்.