சாலை விபத்து: லாரி ஒட்டுநா் பலி

சங்ககிரியை அடுத்த மங்கரங்கம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். இதில் பயணம் செய்த 4 போ் காயமடைந்தனா்.

சங்ககிரியை அடுத்த மங்கரங்கம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். இதில் பயணம் செய்த 4 போ் காயமடைந்தனா்.

எடப்பாடி வட்டம், இருப்பாளி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தனபால் (27), குமாரபாளையம் பகுதியில் செங்கல் பாரத்தை இறக்கி விட்டு சங்ககிரி நோக்கி வந்துள்ளாா். மங்கரங்கம்பாளையம் பகுதியில் சென்ற போது, எதிா்பாராதவிதமாக முன்னாள் காகித பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதியதில், ஓட்டுநா் தனபால், லாரியில் பயணம் செய்த அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா்களான ராஜவேலு (23), வெங்கட் (50), லதா (46), நவமணி (45) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஓட்டுநா் தனபால் உயிரிழந்தாா். நான்கு பேரும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com