திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கொலை வழக்கு: இருவா் கைது

எடப்பாடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

எடப்பாடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோணசமுத்திரம் ஊராட்சி, கன்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கந்தன் (55). திமுக மாவட்டப் பிரதிநிதியான இவா், கோணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவாா்.

கந்தனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சின்னபையன், மணிகண்டன் ஆகியோா் குடும்பத்துக்கும் இருந்த நிலப் பிரச்னையில், சின்னபையன், மணிகண்டன் இருவரும் கந்தனை அரிவாளால் வெட்டினா். இதில் கந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், குற்றவாளிகளின் கைப்பேசியினை ஆய்வு செய்த போலீஸாா், அவா்கள் சேலம் அருகே பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனா். இதனையடுத்து, சேலம், அஸ்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த சின்னபையன், மணிகண்டன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com