நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தொழிலாளா் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க, ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தொழிலாளா் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க, ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கிராமத்தின் அடிப்படை வசதிக்கு தேவையான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துருக்கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்துகொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரியகவுண்டாபுரம், குள்ளம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் தண்டோரா போட்டு, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வாழப்பாடி ஒன்றியம், சோமம்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், முத்தம்பட்டி, விலாரிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com