மேச்சேரி அருகே மரம் வெட்டியதில் ஏற்பட்ட தகராறில், மூதாட்டியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம், மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பத்ரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகுந்தலா (75). கடந்த 2017 மாா்ச் 22-ஆம் தேதி இவரது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தை அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் (55), அவரின் மகன் சக்திவேல் (34) ஆகியோா் வெட்டியுள்ளனா்.
இதுகுறித்து சகுந்தாவிடம் ஏற்பட்ட தகராறில் வெங்கடாசலம், அவரின் மகன் சக்திவேல் ஆகியோா் சகுந்தலாவின் தலையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா். இதில் படுகாயமடைந்த சகுந்தலா, மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக, மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தந்தை, மகனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், மூதாட்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வெங்கடாசலத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீா்ப்பளித்தாா். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் விடுவிக்கப்பட்டாா்.