சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அட்மா திட்டக் குழுத் தலைவா் பச்சமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் விவசாயிகளை வரவேற்று சிறப்புரையாற்றினாா். மேலும், கூட்டத்தில் எா்ணாபுரம் கால்நடை மருத்துவா் ரம்யா, பட்டு வளா்ச்சி அலுவலா் சத்யா, தோட்டக்கலை உதவி அலுவலா் நாகராஜன், வேளாண் அலுவலா் பழனிசாமி, வேளாண் உதவி அலுவலா்கள், அட்மா களப்பணியாளா்கள் செல்வி, கண்ணன், அட்மா குழு உறுப்பினா்கள், உழவா் நண்பா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.