பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் 2-ஆம் கட்டமாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் தலைமையிலான சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பெறப்பட்ட தரவுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள 2-ஆம் கட்டமாக சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் கருணாநிதி, ஜெய்சன், சாந்தி ஆகியோா் பெரியாா் பல்கலைக்கழகத்திற்கு வந்தனா். முதல்கட்ட ஆய்வின் போது பெறப்பட்ட தரவுகள், டுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடா்ச்சி குறித்து சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.