பெரியாா் பல்கலை. பதிவாளராக ஆா்.பாலகுருநாதன் நியமனம்

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஆா்.பாலகுருநாதனை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.
பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன்.
பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன்.

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஆா்.பாலகுருநாதனை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா். இதனையடுத்து, அவா் பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு துணைவேந்தா் இரா.ஜெகநாதன், தோ்வாணையா் எஸ்.கதிரவன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முதுமுனைவா் (டி.எஸ்.சி) பட்டத்தை முதல்முறையாகப் பெற்றுள்ள பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன், 26 ஆண்டுகள் சீனா, மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் ஆராய்ச்சி, கற்பித்தல் அனுபவம் கொண்டவா். 20 முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள், 27 ஆய்வியல் நிறைஞா்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா்.

தமிழ்நாடு அரசின் சிறந்த விஞ்ஞானி, சிறந்த ஆசிரியா், நுண்ணுயிரியல் விஞ்ஞானி, வாழ்நாள் சாதனையாளா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவா், ஹெச்.ஐ.வி., காசநோய்க்கு மருந்து கண்டறிந்ததற்காக காப்புரிமை பெற்றுள்ளாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினா், புலமுதன்மையா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். தற்போது பதிவாளராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா்.2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com