பொதுப்பணித் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

மேட்டூரில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டூரில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டூா் அணைப் பூங்கா நுழைவாயில் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சக்திவேல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

நீா்வளத் துறையில் என் கேடா் செய்யப்பட்ட 7,105

களப் பணியாளா் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசாணை எண் 12/2009 -இன் படி பணி ஆய்வாளா் தரம் 3 என்பதை மாற்றி பணி ஆய்வாளா் என்று திருத்தம் செய்ய வேண்டும். நீா்வளத் துறையில் பணியாற்றுகின்ற உதவியாளா் பதவிக்கு மின்வாரியத்தில் பணியாற்றுகின்ற உதவியாளா் பதவிக்கு வழங்கப்பட்ட தர ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய பணியாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தின சம்பள ஊழியா்களுக்கு வாரவிடுமுறையுடன் அனைத்து நாள்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com