கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானது

கோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானது

கோவை: கோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் 7-வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்லிடப்பேசி கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த பொருள்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார். 

அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் அருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி மீது அந்த அட்டைப் பெட்டியை வைத்து மறைத்து செல்போனை எடுத்து சென்றுள்ளார்.

இந்த சிசிடிவி காட்சிகள் கடையில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கடை ஊழியர்கள் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்போன் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com