இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வள மையத்தில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி உத்தரவின்பேரில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு இரண்டு நாள்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி நடைபெறுகிறது
பெத்தநாயக்கன் பாளையம் வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு.
பெத்தநாயக்கன் பாளையம் வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வள மையத்தில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி உத்தரவின்பேரில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு இரண்டு நாள்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி நடைபெறுகிறது.

தன்னாா்வலா்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிா் மேல்நிலைப் பள்ளி, மாதிரி மேல்நிலைப் பள் ளி, பெரியகிருஷ்ணாபுரம் மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளின் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி நடைபெறுகிறது. இப் பயிற்சி கருத்தாளா்களாக ஆசிரியா்கள் நாகா காா்த்திக், அமிா்தம் ஆகியோா் செயல்பட்டனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து பாா்வையிட்டு ஆலோசனை வழங்கி தன்னாா்வலா்களை ஊக்கப்படுத்தினாா். இதில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ராஜ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com