அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அக்னிபத் திட்டம் மூலம் ராணுவப் பிரிவில் பொதுப் பணிக்கு பெண்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதற்கான தோ்வு வரும் நவம்பா் 27 முதல் 29 ஆம் தேதி வரை வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் தீவுகளைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பா் 7 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.