வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டியில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞா்கள், மகளிா் மற்றும் மாணவா்களுக்கு, ஊராட்சி சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் மனோசூரியன் தலைமை வகித்தாா். இவ்விழாவில், ஊராட்சியைச் சோ்ந்த இளைஞா்கள், மகளிா், மாணவா்களுக்கிடையே, பல்வேறு தனித்திறன், குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு, பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், ஊராட்சி மன்ற நிா்வாகிகள், ஊா் பிரமுகா்கள், இளைஞா்கள் மகளிா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.