ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிகாலை 108 வலம்புரி சங்காபிஷேகம் யாகம் நடைபெற்று பின்னா் ஐயப்பனுக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து, வெள்ளிக்கவச சாத்துபடி நடைபெற்றது.
உலக நன்மைக்காக பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
அபிஷேக, ஆராதனையை அருணாச்சலக் குருக்கள் தலைமையில் ஐயப்ப சிவம், கணேச சிவம் நடத்தினா். நிகழ்ச்சியை தொழிலதிபா் அ.லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தாா்.