சேலம் மாவட்டம், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் சாா்ட் ஆா்.ரவி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம்.வேலுமணி, ஒன்றிய திமுக துணை செயலாளா் ஸ்ரீராம் ஆப்செட் கே.பி.மாதேஸ்வரன், ஆவின் செல்வமணி, நரசிங்கபுரம் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகா்மன்ற உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.