தம்மம்பட்டி அருகே பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் வன உரிமைக் குழு அமைப்பதன் அவசியம், வழிமுறையையும் பற்றின விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற வன அலுவலா் அருணாபாசு பங்கேற்று, பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தாா்.
இந்த முகாமில் திருச்சி மாவட்ட லேம்ப் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, சேலம் மாவட்ட லேம்ப் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பரமசிவம், ஒன்றியக் கவுன்சிலா் பாக்கிஸ் ஜெயக்குமாா்,மாநில உணவுப் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினா் புத்தூா் கணேசன், பச்சமலை ஊராட்சித் தலைவா் சின்னமணி, பிரேம்குமாா், ஒன்றிய கவுன்சிலா் காா்த்திக் உள்பட பலா் பங்கேற்றனா்.