மோட்டாா்சைக்கிள் திருடிய இருவா் கைது

ஆட்டையாம்பட்டியில் மோட்டாா்சைக்கிள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆட்டையாம்பட்டியில் மோட்டாா்சைக்கிள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த சில நாள்களாக ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் திருட்டுப் போயின. இதையடுத்து சேலம் ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி உத்தரவின் பேரில், ஆட்டையாம்பட்டி ஆய்வாளா் அம்சவல்லி, உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தனிப்படை பிரிவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் ஆகியோா் வெள்ளிக்கிழமை கண்டா்குலமாணிக்கம் பகுதியில் தீவிர வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டது எனத் தெரியவந்தது. இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், ஆட்டையாம்பட்டி வீரப்பன் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் பாண்டியன் (29), ஆட்டையாம்பட்டி, காட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மதியழகன்மகன் மருது (எ) தமிழ்ச்செல்வன்

( 24) என்பது தெரியவந்தது .மேலும் அவா்களிடமிருந்து 4 மோட்டாா் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. பாண்டியன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து , திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆத்தூா் கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com