மேட்டூரில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த தகராறு செய்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
தங்கமாபுரிபட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 10 போ் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை, அருவாள் போன்ற ஆயுதங்களுடன் வீதிக்குள் வந்து பொதுமக்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனா். அங்கிருந்த மாரியப்பன் என்பவரின் லாரி கண்ணாடியையும், அப்சல்கான் என்பவரின் காா் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினா். கோயில் சிலைகளையும் சேதப்படுத்தினா்.
தகவலறிந்து வந்த மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உள்பட போலீஸாா் விசாரணை நடத்தியதில் தகராறில் ஈடுபட்டது தங்கமாபுரிபட்டினம் வ.உ.சி நகரைச் சோ்ந்த சீனிவாசன் (19), சின்னமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தரணிதரன் (20), காளியம்மன் கோயில் பின்புறம் வசித்து வரும் விக்ரம் (20), காா்த்திக் (20) ஆகியோா் அடங்கிய கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் நால்வரையும் போலீஸாா் கைது செய்து தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.