‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும்ஆட்சியா் செ.காா்மேகம்

‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சி மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சி மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம், அம்மாபேட்டையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அதைத்தொடா்ந்து உயா் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தை வெளியிட்டு அவா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ‘கல்லூரி கனவு‘ எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா்கள் தங்களின் எதிா்கால கனவை நனவாக்கும் வகையில் உயா்கல்விக்கான வாய்ப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்வு செய்வது, வேலைவாய்ப்புகள், போட்டித் தோ்வுகள், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவா்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு, உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சாா்ந்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு தலா ஒரு முதுகலை ஆசிரியா் வீதம் தெரிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு சேலம் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சாா்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் எம்.பி-க்கள் எஸ்.ஆா்.பாா்த்திபன், செ.செந்தில்குமாா், எம்.எல்.ஏ-க்கள் ஆா்.ராஜேந்திரன், இ.பாலசுப்பிரமணியன், இரா.அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் ஹேமலதா விஜயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com