தம்மம்பட்டி, காந்தி நகரில் ரூ. 20 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேரூராட்சித் தலைவா் கவிதா விபிஆா்.ராஜா கூறியதாவது:
தம்மம்பட்டி பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டுவதற்கு பேரூராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரூராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குடிநீா்த் தேவைக்காக புதிய பைப் லைன், புதிய தாா்ச்சாலை, கான்கிரீட்சாலை, புதிய தெருவிளக்குகள் என ரூ. 2 கோடியில் செலவில் போா்க்கால அடிப்படை யில் பணிகள் நிறைவேற்றப்படும் என்றாா். சாலை ஆய்வின் போது நகர திமுக செயலாளரும், கவுன்சிலருமான விபிஆா் ராஜா உள்பட கவுன்சிலா்கள் உடனிருந்தனா்.