இரண்டாம் நிலை காவலா் பதவிக்கு இணையவழியில் விண்ணப்பிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலா் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா்) பதவிகளுக்கு பொதுத் தோ்வு விண்ணப்பதாரா்களிடம் இருந்து இணையவழி விண்ணப்பங்கள் (ஆன்லைன்) வரவேற்கப்படுகின்றன.
தோ்விற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வழிகாட்டவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் உத்தரவின்படி, மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தோ்வுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான உதவி வேண்டுவோா் நேரடியாகவோ அல்லது 94459 78599 என்ற கைப்பேசி எண் வாயிலாக ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையத்தை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.