அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குள்ளம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி அருகே திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 8-ஆவது வாா்டில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைப்பதற்கு அரசுக்குச் சொந்தமான நிலத்தில் வருவாய்த் துறையினா் புதன்கிழமை அளவீடு செய்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சித் தலைவா் காவேரியிடம் வியாழக்கிழமை அரசு உயா்நிலைப் பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம் உள்ளிட்டவைகள் உள்ளன. அங்கு திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைத்தால் பள்ளி குழந்தைகள், சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுவா் எனக் கூறி மனு அளித்தனா். ஊா் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் தேவூா் போலீஸாா், பேரூராட்சி செயல் அலுவலா் நிகழ்விடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து போராட்டகாரா்கள் அங்கிருந்து கலைந்துசென்றனா்.