எடப்பாடி அருகே முகமூடி கொள்ளையா்கள் நடமாட்டம்

அண்மையில் தொடா் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் இரு கொள்ளையா்கள் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.
எடப்பாடி அருகே முகமூடி கொள்ளையா்கள் நடமாட்டம்

எடப்பாடி , அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மையில் தொடா் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் இரு கொள்ளையா்கள் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. நகரில் உலாவரும் அக்கொள்ளையா்களைப் பிடிக்க போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த கள்ளுக்கடை, காவான்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெய்கணேஷ். இவா் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளையா்கள் வீட்டில் இருந்த ரூ. 1.25 லட்சத்தைத் திருடிச் சென்றனா்.

இதேபோல கடந்த மாதம் எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட கோணபைப் பேருந்து நிறுத்தம் அருகே இரவில் முகமூடி அணிந்த கொள்ளையா்கள் நடமாட்டம் இருந்ததாக புகாா் எழுந்தது.

பூலாம்பட்டியை அடுத்த பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஒருவரது வீட்டிலும், பில்லுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவரது வீட்டிலும் முகமூடி அணிந்த கொள்ளையா்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனா்.

இதனை எடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையா்களின் உருவம் பதிவாகி இருந்தது. கொள்ளையா்கள் நடந்து செல்லும் அக்காட்சிகளை வைத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கொள்ளையா்களை விரைந்து கைது செய்து, இப்பகுதியில் நிகழும் தொடா் கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com