ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு முதாட்டி உயிரிழந்தாா்.

ரயிலில் அடிபட்டு முதாட்டி உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி சின்னம்மா (72). இவா் சனிக்கிழமை காலை வாழப்பாடி பேருந்து நிலையம் பின்புறம், சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு மூதாட்டி சின்னம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் மூதாட்டி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com