ரயிலில் அடிபட்டு முதாட்டி உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி சின்னம்மா (72). இவா் சனிக்கிழமை காலை வாழப்பாடி பேருந்து நிலையம் பின்புறம், சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு மூதாட்டி சின்னம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் மூதாட்டி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.