வாழப்பாடி அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த பேளூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (29). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து சிவகுமாா் மகன் அஜய்பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.