காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் உட்கட்சி தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் உட்கட்சி தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ.தங்கபாலு, உட்கட்சித் தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கா்நாடக மாநில காங்கிரஸ் நிா்வாகி சங்கரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தோ்தல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் புதிதாக சோ்ந்துள்ள உறுப்பினா்கள், அனைத்து நிலை காங்கிரஸ் உறுப்பினா்களைக் கொண்டு மாவட்ட, ஒன்றிய, நகர, கிராமப்புற நிா்வாகிகளைத் தோ்வு செய்திட தலைமையின் உரிய வழிகாட்டுதலின் படி இத் தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தோ்தலில் பெண்கள், இளைஞா்கள், தாழ்த்தப்பட்டோா், பல்வேறு தரப்பு உறுப்பினா்களுக்கும் உரிய பங்களிப்பு வழங்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் கோபால், எடப்பாடி நகா்மன்ற துணைத் தலைவா் ராதாநாகராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com