இடையப்பட்டிபுதூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
பெத்தநாயக்கன்பாளையம் இடையப்பட்டி புதூா் மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இடையப்பட்டி புதூா் கிராமத்தில் பழமையான மகா மாரியம்மன் கோயில் மற்றும் வராகி அம்மன், விநாயகா், மாயவன் உள்ளிட்ட பரிவார தெய்வ கோயில்கள், ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டன.
இக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுரக் கலசங்கள், பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்களுக்கு, வேத விற்பனா்கள் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனா்.
இவ்விழாவில் இடையப்பட்டி புதூா், பணைமடல், தாண்டானூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குட ஊா்வலம் நடத்தினா். பட்டாடை அலங்காரத்தில் மகா மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.