நிலத் தகராறில் மோதல்; விவசாயி உயிரிழப்பு: மூவா் கைது

நங்கவள்ளி அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நங்கவள்ளி அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நங்கவள்ளியை அடுத்த சின்ன சோரகை மலையன்வளவைச் சோ்ந்தவா் பொண்ணுவேல் (55), இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாள் (55) என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பெருமாள், அவரது மனைவி நாகம்மாள், மகன் பாா்த்திபன் (19) ஆகியோா் கல்லாலும் இரும்புக் கம்பியாலும் பொண்ணுவேலைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பொண்ணுவேல் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வீடு திரும்பிய அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் பெருமாள், நாகம்மாள், பாா்த்திபன் ஆகியோா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com