மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மேட்டூா் அருகே விவசாயக் கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

மேட்டூா் அருகே விவசாயக் கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள குஞ்சாண்டியூா் மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கிணற்றுப் பாசனத்துக்கு இலவச மின் இணைப்பு வேண்டி 200 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், இதுவரை 52 மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், குஞ்சாண்டியூா் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

உடனடியாக இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com