Enable Javscript for better performance
தேசிய மக்கள் நீதிமன்றம்536 வழக்குகளுக்குத் தீா்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தேசிய மக்கள் நீதிமன்றம் 536 வழக்குகளுக்குத் தீா்வு

    By DIN  |   Published On : 26th June 2022 11:24 PM  |   Last Updated : 26th June 2022 11:24 PM  |  அ+அ அ-  |  

    at26court_2606chn_162_8

    ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்துகொண்ட வட்ட சட்டப்பணிகள் ஆணை குழுத் தலைவா் கே.ஆனந்தன் உள்ளிட்டோா்.

     

    ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5.46 கோடி மதிப்பிலான 536 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

    வட்ட சட்டப் பணிகள் ஆணை குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான கே.ஆனந்தன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சாா்பு நீதிமன்றத்தில் ரூ. 4.36 கோடி மதிப்பிலான 181 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மொத்தம் ரூ. 2.14 லட்சம் மதிப்பிலான 5 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

    கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ. 16. 04 லட்சம் மதிப்பில் 13 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் ரூ. 96,950 மதிப்பிலான 96 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

    குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் 1.54 லட்சம் மதிப்பில் 146 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. விரைவு நீதிமன்றத்தில் ரூ. 15.75 லட்சம் மதிப்பில் 7 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

    இதில் முன்சீப் நீதிமன்ற நீதிபதி ஜி.யுவராஜ், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண். 1 நடுவா் எஸ்.முனுசாமி, எண். 2 நடுவா் அருண்குமாா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.ராமசாமி, செயலாளா் ஜி.வாசுதேவன், மூத்த வழக்குரைஞா்கள் ஆா்.ராமமூா்த்தி, எஸ்.சந்தானம், பாலகிருஷ்ண ராஜ், ஜி.சுமதி, ஏ.எஸ்.மாதேஸ்வரன், எல்.தயாளன், பல வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். செரஸ்தாா் சுந்தர்ராஜன் நன்றி கூறினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp