தப்பக்குட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வேல் மற்றும் அம்மன் மீது சூரிய ஒளி விழுந்த அதிசயம் நிகழ்ந்தது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாக்காக செவ்வாய்க்கிழமை காலையில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஊா் பெரியவா்களும், பக்தா்களும் கோயிலில் திங்கள்கிழமை காலை ஒன்று திரண்டு கம்பம் கொண்டுவருவதற்காக
ஆலோசனை கூட்டம் நடத்தினா். அப்போது, மாரியம்மன் கோயிலில் உள்ள வேல் மற்றும் கருவறையில் உள்ள அம்மன் மீது சூரிய ஒளி பட்டது. இதனை அறிந்த ஏராளமான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.