சேலத்தில் வாகனத்தை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்து தீக்குளித்த ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .
கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த சரக்கு வாகன ஓட்டுநா் சந்தோஷ்குமாா். இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸாா், அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமாா் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சந்தோஷ்குமாா் உயிரிழந்தாா்.