காதலி இறந்ததால் காா் ஓட்டுநா் தற்கொலை

சேலத்தில் காதலி இறந்ததால் மனமுடைந்த காா் ஓட்டுநா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சேலத்தில் காதலி இறந்ததால் மனமுடைந்த காா் ஓட்டுநா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம், சின்ன திருப்பதி, சாந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி கிரண் (29). இவா் கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தவா் மலா்விழி (23).

இவா்கள் இருவரும் காதலித்து வந்தனா். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, ஜோதிடரிடம் ஜாதகம் பாா்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் ஜாதக பொருத்தம் சரியில்லை என ஜோதிடா் கூறியுள்ளாா். மேலும், ரவிகிரணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மலா்விழி, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

மன வேதனையில் இருந்த ரவிகிரண், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com