வாழப்பாடி பேரூராட்சியில்,சொந்த செலவில் சாக்கடை மேல்தளம், தெரு விளக்குகள் அமைத்து, தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியின் 5ஆவது வாா்டு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டவா் அதிமுக நகரச் செயலாளா் சிவகுமாா்.
இவா் தனது வாா்டைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தனது சொந்தச் செலவில் கழிவுநீா் சாக்கடைக்கு சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் அமைத்துக் கொடுத்துள்ளாா். மேலும் வாா்டு முழுவதும் நவீன எல்இடி தெரு விளக்குகளைப் பொருத்தி கொடுத்துள்ளாா்.
வாக்காளா்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தனது சொந்த செலவில் நிறைவேற்றிய பேரூராட்சி மன்ற உறுப்பினா் சிவகுமாருக்கு, இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.